அவல் காய்கறி உப்புமா
தேவையான பொருள்கள் :
விருப்பமான நறுக்கிய காய்கறிகள் ( கேரட், பீன்ஸ், கார்ன் ) : 1 கப்
கெட்டி அவல் : 1 கப்
பச்சை மிளகாய் : 1-2
சின்ன வெங்காயம் : 4-5
மஞ்சள் பொடி : 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் : ஒரு சிட்டிகை
உப்பு : தேவையான அளவு
கொத்தமல்லித் தளைகள் : சிறிது
எலுமிச்சம் பழச்சாறு : 1 தேக்கரண்டி
தாளிப்பதற்கு :
எண்ணெய் : 1மேஜைக்கரண்டி
கடுகு : 1 தேக்கரண்டி
உளுந்து : 1தேக்கரண்டி
வேர்க்கடலை : 1 மேஜைக்கரண்டி
சீரகம் : 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை : சிறிதளவு
செய்முறை :
அவலை தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக கழுவி தண்ணீரை வடித்துவிட்டு, அதில் மஞ்சள்பொடி, உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து கலந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில், எண்ணெய் சேர்த்து, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து தாளித்த பின், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
வெங்காயம் வதங்கிய பின்னர், நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
காய்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி காய்கறிகளை வேக வைத்துக் கொள்ளவும்.
காய்கள் வெந்தவுடன் நனைத்து வைத்துள்ள அவலை சேர்த்து, ஓரிரு நிமிடங்கள் காய்களோடு சேர்ந்து வரும்வரை வதக்கிய பின் கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சுவையான அவல் காய்கறி உப்புமா தயார்.
சிறிது ஆறியபின்னர் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பரிமாறவும்
குறிப்புகள்:
அவலில்சில நேரங்களில், மிகவும் சிறிய பூச்சிகள் இருக்கலாம்ஆகையால் அவலை நன்றாக கழுவிய பின்னர்தான் உபயோகிக்க வேண்டும்.
அவலை தண்ணீர் சேர்த்து ஊற வைக்க தேவையில்லை, நனைத்தாலே போதுமானது.
விருப்பமான காய்கறிகளை சேர்த்தோ அல்லது காய்கறிகள் இல்லாமலோ இதே முறையில் உப்புமாதயாரிக்கலாம்.
சிறிய வெங்காயத்திற்கு பதிலாக பெரிய வெங்காயம் சேர்த்தும் செய்யலாம்.
கெட்டியான அவலில் தான் இந்த உப்புமா தயாரிக்க வேண்டும். நான் சிகப்பு கெட்டி அவல் (சம்பா அவல்) உபயோகித்து இந்த உப்புமா தயாரித்துள்ளேன்வெள்ளை கெட்டி அவலிலும்இதே முறையில் உப்புமாதயாரிக்கலாம்.
No comments:
Post a Comment