கேரட் அல்வா
தேவையான பொருள்கள் :
துருவிய கேரட் : 2 கப்
பால் : 1 கப்
சர்க்கரை : 3/4 கப்
மாவா / சர்க்கரை சேர்க்காத பால்கோவா : 1/2 கப்
ஏலக்காய்த்தூள் : 1/2 தேக்கரண்டி
குங்குமப்பூ : 1/4 தேக்கரண்டி
நெய் : 4 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு : 5-8
செய்முறை :
ஒரு வாணலியில் ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்து, அதனோடு கேரட் சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர், வாணலியை மூடி காரட்டை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் இதனோடு, பால் , குங்குமப்பூ சேர்த்து மீண்டும் மூடி போட்டு நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
பால் முழுவதும் நன்றாக அப்ஷார்ப் ஆகிய பின்னர், சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.
சர்க்கரை நன்றாக சேர்ந்து, கேரட் கலவை கட்டியாக சுருண்டு வரும் பொழுது, உதிர்த்த மாவா/ கோவா சேர்த்துமீண்டும் கலந்து வைத்துக் கொள்ளவும்.
மீதமுள்ள நெய்யைச் சேர்த்து அல்வா பதத்திற்கு வரும் பொழுது ஏலக்காய், முந்திரி சேர்த்து இறக்கினால்சுவையான கேரட் அல்வா தயார்.
குறிப்புகள் :
நான் இந்த அல்வாவை டெல்லி கேரட்டில் செய்துள்ளேன். நீங்கள் இதே கேரட்டிலோ அல்லது சாதாரணஆரஞ்சு கேரட்டிலோ இந்த முறையில் அல்வா தயாரிக்கலாம்.
கேரட்டிற்கு பதிலாக பீட்ரூட்டிலும் இதே முறையில் அல்வா தயாரிக்கலாம்.
முந்திரிக்கு பதிலாக விருப்பமான நட்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
சர்க்கரை சேர்க்காத பால்கோவாவிற்கு பதிலாக இன்னும் இரண்டு கப் பால் சேர்த்து, இதே முறையில்தயாரிக்கலாம்.
இந்த அல்வாவை சூடாகவோ அல்லது வெண்ணிலா ஐஸ்கிரீமோடு சேர்த்தோ பரிமாறலாம்.