பனீர் பராத்தா :
தேவையான பொருள்கள் :
மேல் மாவு செய்வதற்கு :
கோதுமை மாவு : 1 கப்
எண்ணெய்/நெய் : 1 மேஜைக்கரண்டி
உப்பு : தேவையான அளவு
தண்ணீர் : தேவைக்கேற்ப
பனீர் ஸ்டபிங்/ பூரணம் செய்வதற்கு :
உதிர்த்த பனீர் : 2 கப்
காஷ்மீரி மிளகாய் பொடி : ½ தேக்கரண்டி
கரம் மசாலா : ¼ தேக்கரண்டி
துருவிய இஞ்சி : 1 இன்ச்
உலர்ந்த மாங்காய்ப்பொடி/ ஆம்சூர் பொடி : ½ தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தளைகள் : ஒரு கைப்பிடி
உப்பு : தேவைக்கேற்ப
செய்முறை :
பராத்தா மாவு செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்த பின்னர், சிறிது சிறிதாக தேவையானதண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து இறுதியாக எண்ணெய்/நெய்யை மாவின் மீது தடவி 20 -30 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும்
பனீர் பூரணம் :
ஒரு பாத்திரத்தில் உதிர்த்த பனீர், மிளகாய் பொடி, கரம் மசாலா, ஆம்சூர் பொடி, இஞ்சி கொத்தமல்லி தளைகள்மற்றும் உப்பு சேர்த்து கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்
பராத்தா செய்முறை :
முதலில் ஒரு எலுமிச்சை அளவு மாவினை எடுத்து சிறிய சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ளவும் பின்னர் பனீர்கலவையை நடுவினில் வைத்து மாவினால் மூடி, போளி தேய்ப்பது போல மெதுவாக தேய்த்துக் கொள்ளவும்
தேவைப்பட்டால், சிறிது கோதுமை மாவினைத் தூவி மெதுவாக தேய்க்கவும்
பின்னர், சூடான தவாவில் தேய்த்து வைத்துள்ள பராத்தாக்களை வைத்து, சிறிது நெய் சேர்த்து, நன்றாகஇரண்டு புறமும் வேக வைத்து எடுத்தால் சுவையான பனீர் பராத்தா தயார்
குறிப்புகள் :
இந்த பராத்தாவோடு தயிர்/ரைத்தா/ ஊறுகாய் /சாஸ் சேர்த்து பரிமாறலாம்
இந்த பராத்தாவினை நெய் சேர்த்து சுடும் பொது மிகவும் சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும்
இது குழந்தைகளுக்கு பிரியமான ஒரு சுவையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி
No comments:
Post a Comment