இஞ்சித்தொகையல்:
தேவையான பொருட்கள் :
நறுக்கிய இஞ்சி : ஒரு கப்
காய்ந்த மிளகாய் : 2
புளி : 20 கிராம் (ஒரு எலுமிச்சம் பழம் அளவு )
உப்பு : ஒரு தேக்கரண்டி
தாளிப்பதற்கு:
கடுகு : 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் : 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு : 1 தேக்கரண்டி
பெருங்காயம் : 1 /4 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி அதில் காய்ந்த மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து சேர்த்துநன்றாக வதக்கிக் கொள்ளவும்.
இஞ்சி நன்றாக வதங்கியவுடன் அதனுடன் புளி மற்றும் உப்பு சேர்த்து ஒரு ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின்னர்அடுப்பை அணைத்து விடவும்.
மிளகாய் மற்றும் இஞ்சிக் கலவை சிறிது ஆறியவுடன் அதனை ஒரு மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டுஅரைத்தால் சுவையான இஞ்சித் தொகையல் தயார்.
குறிப்புகள்:
இஞ்சி மற்றும் காய்ந்த மிளகாய் ஆகிய இரண்டுமே காரம் அதிகமுள்ளதாகையால் புளியும் உப்பும் சற்றுஅதிகமாக சேர்க்க வேண்டும்.
காரம் அதிகமென்று நினைத்தாலோ அல்லது விருப்பட்டாலோ சிறிது வெல்லம் அல்லது சிறிது தேங்காயோசேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
சூடான சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் அல்லது நெய்யோடு இந்த தொகையல் சேர்த்து சாப்பிடலாம்.
No comments:
Post a Comment