Saturday, September 16, 2023

கோதுமை மாவு வாழைப் பழ கேக் ( Eggless Banana Cake with wheat flour)

 கோதுமை மாவு வாழைப் பழ கேக்:




தேவையான பொருள்கள் :

 

கோதுமை மாவு - ஒரு கப்

 

பூவன் பழம் - 2

 

சர்க்கரை - 1 /2 கப்

 

எண்ணெய் - 1/4 கப்

 

தயிர் - 1/8 கப்

 

பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி

 

பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி

 

வெண்ணிலா எசென்ஸ் /பவுடர்  - 1/2 தேக்கரண்டி

 

முந்திரிப் பருப்பு : சிறிது

 

உப்பு - ஒரு சிட்டிகை

 

செய்முறை :

 

ஓவனை 180 டிக்ரீஸ்க்கு முதலில் சூடாக்கி கொள்ளவும்.

 

ஒரு பாத்திரத்தில் வாழைப்பழத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

 

பின்னர்அதனுடன் சர்க்கரைஎண்ணெய் வெண்ணிலா எசென்ஸ் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

 

இதனுடன் கோதுமை மாவுபேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

 

இந்த கலவையை எண்ணெய் தடவிய ஒரு பேக்கிங் பேனிற்கு மாற்றி அதன் மீது முந்திரிப் பருப்புகள் சேர்த்து அலங்கரித்துபின்னர் 180  டிஃகிரீசில் 30 - 35  நிமிடங்கள் பேக் செய்தால் சுவையான வாழைப்பழ கேக் தயார்.

 

குறிப்பு:

 

பேக்கிங் செய்வதற்கு முன்னர் ஓவனை முதலில் ஒரு பத்து நிமிடங்கள் வரை கண்டிப்பாக சூடாக்க வேண்டும்.இவ்வாறு செய்வதால் ஓவனின் வெப்பநிலை பேக்கிங் செய்வதற்கு தேவையான அளவிற்கு வந்துவிடும். அதாவதுதோசைக் கல்லை முதலில் சூடாக்கிய பின்னர் தானே தோசைகள் செய்வோம் அதே முறை தான்.

 

கோதுமை மாவிற்கு பதிலாக மைதா மாவிலும் இதே முறையில் கேக் செய்யலாம்.

 

இந்த கேக்கிற்கு பொடித்த சர்க்கரை தேவை இல்லை. நான் சாதாரணமாக உபயோகிக்கும் சர்க்கரை தான் சேர்த்து செய்தேன்.

 

எண்ணெய் -  தங்களுக்கு விருப்பமான ஆனால் வாசனை இல்லாத எண்ணெய்யாக பயன்படுத்தலாம்.

 

முந்திரிக்கு பதிலாக விருப்பமான  எந்த பருப்பையும் சேர்க்கலாம்.

 

கேக்  நன்றாக ஆறியதும் தான் துண்டுகள் போட வேண்டும்

அகர் அகர் ஜெல்லி கேக் ( Agar Agar Jelly fruit Cake)

 அகர் அகர் ஜெல்லி கேக் :



தேவையான பொருள்கள் :

 

அகர் அகர்/ கடல் பாசி /சைனா க்ராஸ் (China Grass)  : 10 கிராம்கள்

சர்க்கரை : 1/2 கப்

தண்ணீர் : கப்

நறுக்கிய பழங்கள் : கப் (ஆப்பிள்ஆரஞ்சுமாம்பழம்வாழைப்பழம்,திராட்சைப் பழம் )

 

செய்முறை : 

 

முதலில்ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றிஅதில் அகர் அகர் சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.

 

எல்லா பழங்களையும் சிறு சிறு துண்டுகளாக விருப்பமான வடிவத்தில் நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

 

ஒரு அடி கனமான வாணலியில்,ஒரு கப் தண்ணீர்அரை கப் சர்க்கரை மற்றும் ஊற வைத்துள்ள அகர் அகர் மேலும்  அந்த தண்ணீரையும் சேர்த்துக் கலந்து நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.

 

பின்னர் ஒரு பாத்திரத்தில்முதலில் ஒரு கரண்டி இந்த கொதிக்க வைத்துள்ள அகர் அகர் கலவையை ஊற்றிய பின்னர்நறுக்கி வைத்துள்ள பழத் துண்டுகளை விருப்பமான முறையில் அடுக்கிய பின்னர் மீண்டும் மீதமிருக்கும் அகர் அகர் கலவையை பழத் துண்டுகள் மூழ்கும் வரை ஊற்ற வேண்டும்.

 

பின்னர் இந்த ஜெல்லி கேக்கை ஒரு மணி நேரம் அறை வெப்பநிலையில் வைத்தால் சுவையான ஜெல்லி கேக் தயார்.

 

குறிப்புகள்:

 

அகர் அகர் பவுடர் பார்மில் உபயோகித்தால்அதை ஊற வைக்கத் தேவையில்லை. இரண்டு தேக்கரண்டி அகர் அகர் பொடியோடு இரண்டு கப் தண்ணீர் மற்றும் அரை கப் சர்க்கரை சேர்த்து அதனை நிமிடங்கள் கொதிக்க வைத்து பின்னர் செட் செய்தால்சுவையான ஜெல்லிகள் தயார்..

 

இந்த ஜெல்லியை குளிர் சாதன பெட்டியில் வைத்தால்மிகவும் விரைவாக செட் ஆகிவிடும்.

 

அகர் அகர்/ கடல் பாசி /சைனா க்ராஸ் (China Grass) - இது இயற்கையானது. இதில் கெமிக்கல் எதுவும் கிடையாது. மேலும் இது மிகவும் குளிர்ச்சியை தரும். ஆகையால்குழந்தைகளுக்கு குளிர் காலத்தில் கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது.

 

இரண்டு கப் தண்ணீருக்கு பதிலாகஒரு கப் தண்ணீர் ஒரு கப் விருப்பமான ஜூஸ் ( தர்பூசணி ஜூஸ் / மாம்பழம்/ அன்னாசிப்பழம் ஜூஸ்) அல்லது பால் / தேங்காய் பால் / இளநீர் போன்றவைகளும் சேர்த்து தயாரிக்கும் பொழுது மிகவும் சுவையாக இருக்கும்.

 

உங்களுக்கு விருப்பமான பழங்களை சேர்த்து இதே முறையில் தயாரிக்கலாம்.

 

கேக் மௌல்டுகள் / ஐஸ் டிரே போன்றவற்றிலும் இந்த ஜெல்லிகளை தயாரிக்கலாம்

 

கடலை கறி (Kadalai kari/curry )

 கடலை கறி:


தேவையான பொருள்கள் :

 

கருப்பு கொண்டக்கடலை : கப் 

சின்ன வெங்காயம் : 5-8

பச்சை மிளகாய் : 2-3

உப்பு : தேவையான அளவு 

தண்ணீர் : தேவைக்கேற்ப 

 

வறுத்து அரைப்பதற்கு :

 

வெங்காயம் : 1

தக்காளி : 1

துருவிய தேங்காய் : 1/4 கப் 

துருவிய இஞ்சி : துண்டு 

நறுக்கிய பூண்டு : 

பட்டை : 1/4 இன்ச் 

ஏலக்காய் : 1-2 

கிராம்பு : 1-2

சோம்பு : தேக்கரண்டி

மஞ்சள் பொடி :  1/4 தேக்கரண்டி 

மிளகாய் பொடி : தேக்கரண்டி 

தனியா / கொத்தமல்லி பொடி : தேக்கரண்டி 

கரம் மசாலா : 1/2 தேக்கரண்டி 

கருவேப்பிலை : 5-8 இலைகள் 

தேங்காய் எண்ணெய் : மேஜைக்கரண்டி 

 

தாளிப்பதற்கு : 

 

தேங்காய் எண்ணெய் : தேக்கரண்டி 

கடுகு : 1/2 தேக்கரண்டி 

உளுத்தம்பருப்பு : 1/2 தேக்கரண்டி 

காய்ந்த மிளகாய் : 1-2 

கருவேப்பிலை : சிறிது 

 

செய்முறை :

 

முதலில் கொண்டைக்கடலையை அது மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து முதல் 12 மணி நேரங்கள் ஊறவைத்துபின்னர் அதனை குக்கரில் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

 

ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றிஅதில் வறுக்க கொடுத்துள்ள பொருள்களை ஒவ்வொன்றாகசேர்த்து நன்றாக வதக்கிய பின்னர்அதனை நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

 

ஒரு அடி கனமான வாணலியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களைசேர்த்து தாளித்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

 

பின்னர் இதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின்னர் வேக வைத்துஎடுத்துள்ள கடலையை சேர்த்து கலந்து கொள்ளவும். 

 

பின்னர் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்துஒரு 10 நிமிடங்கள் மூடி போட்டு கொதிக்க வைத்துஇறக்கினால் சுவையான கடலைக் கறி தயார். 

 

குறிப்புகள் :

 

இந்த முறையில் செய்வதற்கு காலா சென்னா என்று அழைக்கப்படும் கருப்பு கொண்டைக்கடலையை தான்பயன்படுத்துவார்கள். ஆனால்விருப்பப்பட்டால் வெள்ளை கடலையிலும் செய்யலாம்.

 

தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி செய்யும் சுவையும் மனமும் அருமையாக இருக்கும்.

 

விருப்பப்பட்டால் சிறிது தேங்காய் பாலையும் சேர்த்துக் கொள்ளலாம்.

 

இதனோடு புட்டுஇடியாப்பம்ஆப்பம்சப்பாத்திரொட்டி மற்றும் புல்காவுடன் சேர்த்து சாப்பிடலாம்.

 




பாதாம் அல்வா (Almond Halwa/ Badam Halwa)

 பாதாம் அல்வா:

தேவையான பொருள்கள் : 


பாதாம் : கப்

சர்க்கரை : கப்

நெய் : 1/2 கப்

பால் : கப்

குங்குமப்பூ : தேக்கரண்டி

 

செய்முறை : 

 

முதலில் பாதாம் பருப்புகளை சிறிது வெந்நீர் ஊற்றி 2-3 மணி நேரங்கள் ஊற வைத்துஅதனுடைய தோலை உரித்துக் கொள்ளவும்.

 

பின்னர் 1/4 கப் பாலில் குங்குமப்பூ சேர்த்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

 

பின்னர் மீதமுள்ள 3/4 கப் பாலை சிறுது சிறிதாக சேர்த்து பாதாம் பருப்புகளை மிக்ஸியில் நன்றாக/ மையாக  அரைத்துக் கொள்ளவும்.

 

ஒரு அடிகனமான வாணலியில்அரைத்த பாதாம் விழுது சர்க்கரை இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கிளறவும்.

 

நடுநடுவில், 1/2 கப் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து அடி பிடிக்காமல் கிளற வேண்டும்.

 

இறுதியாககுங்குமப்பூ சேர்த்த பால் சேர்த்து அல்வா பதத்திற்கு கிளறினால் சுவையான பாதாம் அல்வா தயார்.

 

குறிப்புகள்: 

 

பாதாம் பருப்புகளை அரைக்கும் பொழுது மொத்தமாக பால் சேர்த்து விடக்கூடாது.சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.

 

விருப்பப்பட்டால், 1 - 2 மேஜைக்கரண்டி கண்டென்ஸ்ட்மில்க் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் சுவை சிறிது மாறுபடும்.

 

நெய் இந்த அளவிற்காவது சேர்க்க வேண்டும். இல்லையேல் அல்வா பதம்  சரியாக வராது. ஒரு வேளை அல்வா சிறிது பிசுபிசுப்பாக இருந்தால்இறுதியில் இன்னும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்தால் பதம் சரியாக வந்து விடும்.

 

இந்த அல்வாவை மிதமான தீயில் மெதுவாக கிளறி சரியான பதத்தில் இறக்கி விட வேண்டும்

 

பேரிச்சம்பழம் அண்ட் நட்ஸ் லட்டு ( Dates and nuts laddu / dry fruits laddu )

 பேரிச்சம்பழம் அண்ட் நட்ஸ் லட்டு:



தேவையான பொருள்கள் : 

 

பேரிச்சம்பழம் (விதை நீக்கியது) : கப்

முந்திரி பருப்புபாதாம் பருப்புபிஸ்தா & வால்நட் : கப் (எல்லாம் சேர்த்து) 

கிஸ்மிஸ் / உலர்ந்த திராட்சை : தேக்கரண்டி 

டெஸிகேட்டட் தேங்காய் : 1 - 2 மேஜைக்கரண்டி 

நெய் : தேக்கரண்டி ( விருப்பப்பட்டால்) 

 

செய்முறை :

 

ஒரு வாணலியில், 1/2 தேக்கரண்டி நெய் சேர்த்துகிஸ்மிஸ் மற்றும் எல்லா பருப்புகளையும் சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

 

மீண்டும் அதே வாணலியில்மீதமிருக்கும் 1/2 தேக்கரண்டி நெய் மற்றும் பேரிச்சம்பழம் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

 

சிறிது ஆறியபின்னர்ஒரு மிக்ஸி ஜாரில் கிஸ்மிஸ்டெஸ்ஸிகேட்டட் தேங்காய் மற்றும் பருப்புகளைச் சேர்த்து ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.

 

பின்னர் இதனுடன்பேரிச்சம் பழம் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும். 

 

பின்னர்இந்த கலவையினை எடுத்து கைகளால் லட்டுகளாக உருட்டிய பின்னர்விருப்பப்பட்டால் டெஸ்ஸிகேட்டட் தேங்காயை மேலே தூவி அலங்கரித்தால்சுவையான பேரிச்சம்பழம் மற்றும் நட்ஸ் லட்டு தயார்.

 

குறிப்புகள் :

 

விருப்பமான பருப்புகள் மட்டுமின்றி விருப்பமான விதைகளையும் ( வெள்ளரி விதைபூசணிக்காய் விதை ) உலர் பழங்களையும் (apricot, fig ) போன்றவைகள் சேர்த்தும் இதே முறையில் தயாரிக்கலாம். 

 

கசகசா கூட ஒரு தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளலாம். (இங்கே அது தடை செய்யப்பட்ட ஒரு பொருள் ஆகையால் நான் சேர்க்கவில்லை) 

 

ஒரு கப் பேரீச்சம்பழத்திற்கு ஒரு கப் பருப்புகள் மற்றும் விதைகள் சேர்த்து தயாரிக்கும் பொழுதுதனியாக எந்த சுவையூட்டிகளையும் சேர்க்க தேவையில்லை. பேரீச்சம்பழத்தில் இருக்கும் இனிப்பு சுவையே போதுமானது. 

 

நெய் சேர்க்காமலும் பருப்புகள் மற்றும் பேரீச்சம்பழத்தினை உலர் வறுவலாக (dry roast) வறுத்தும் இதே முறையில் லட்டுகள் தயாரிக்கலாம். 

 

பருப்புகள் மற்றும் பழத்தை வறுக்காமல் பருப்புகளை தனியாக மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்துபின்னர் பழத்தை மிக்ஸியில் தனியாக அரைத்து எடுத்துக் கொண்டு,  பின்னர் ஒரு வாணலியில் நெய் சேர்த்து முதலில் பருப்புகள்கிஸ்மிஸ்தேங்காய் சேர்த்து கொஞ்சம் வறுத்த பின்னர் அரைத்த பேரிச்சம்பழம் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கினால்நன்றாக திரண்டு வரும். பின்னர் அதனை லட்டுகளாக பிடித்துக் கொள்ளலாம். இந்த முறையிலும் இந்த லட்டுகளை தயாரிக்கலாம். 

 

வறுத்த பருப்புகளை (already roasted nuts and  seeds) உபயோகிப்பதாக இருந்தால்இது ஒரு சமைக்கவே தேவையில்லாத ஒரு நோ குக் ரெசிபி. ஒரு மிக்ஸி ஜாரில் நட்ஸுகளை சேர்த்து ஒன்றிரண்டாக பொடித்த பின்னர்பேரீச்சம்பழத்தை மிக்ஸியில் சேர்த்து மீண்டும் ஒரு சுற்று சுற்றி எடுத்துலட்டுகளாக பிடித்தும் தயாரிக்கலாம்.

 

டெஸிகேட்டட் தேங்காய்க்கு பதிலாக வறுத்த வெள்ளை எள்ளை இந்த லட்டுகளின் மேலே தூவி அலங்கரிக்கலாம்.

நெய் உருண்டை / மாலாடு (Maalaadu)

 நெய் உருண்டை / மாலாடு:


தேவையான பொருள்கள் :  

பொட்டுக்கடலை/பொரிகடலை : கப் 

சர்க்கரை : 3/4 கப் 

நெய்  : 1/2 கப் 

ஏலக்காய் : 2

உடைத்த முந்திரி பருப்புகள் :  10 to 15

 

செய்முறை : 

 

ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலையை சேர்த்து நன்றாக அரைத்து பின்னர் இந்த மாவினை சல்லடையில் சலித்து எடுத்துக் கொள்ளவும்.

 

பின்னர் அதே மிக்ஸி ஜாரில்சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்றாக பொடித்து கொள்ளவும். 

 

பின்னர் சர்க்கரை மற்றும் பொட்டுக்கடலை மாவினை கலந்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.

 

ஒரு வாணலியில் சிறிது நெய் சேர்த்துஅதில் உடைத்து வைத்துள்ள முந்திரிகளை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

 

பின்னர் மீதமிருக்கும் நெய்யை வாணலியில் சேர்த்து நன்றாக உறுக்கிக் கொள்ளவும்.

 

பின்னர் இந்த சூடான உருக்கிய நெய்யைமாவு மற்றும் சர்க்கரைக் கலவையோடு வறுத்து முந்திரிப்பருப்புகளையும் சேர்த்து ஒரு கரண்டி வைத்து நன்றாக கலந்து கொள்ளவும்.

 

கை பொறுக்கும் சூட்டிற்கு மாவு வந்தவுடன்வேகமாக லட்டுகளை பிடித்து ஒரு நிமிடங்கள் வைத்தால்சுவையான நெய் உருண்டைகள் தயார்.. 

 

குறிப்புகள் :

 

திருநெல்வேலியில் மொத்தமாக பொட்டுக்கடலைசர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து மில்லில் / மெஷினில் அரைத்து வைத்திருப்பார்கள். தேவையான பொழுதுநெய் மட்டும் சேர்த்தால்உருண்டைகள் தயார் ஆகிவிடும். இந்த மாவு 3 - 6 மாதங்கள் வரைக்கும் வைத்து பயன்படுத்தலாம். 

 

நெய் நன்றாக சூடாக இருக்க வேண்டும். நெய்யினுடைய சூட்டில்சர்க்கரை இளகிமாவானது லட்டுகள் பிடிக்க திரண்டு வரும். 

 

பொட்டுக்கடலைக்கு பதிலாகபாசிப்பருப்பை வறுத்து பொடித்தோ/ வறுத்த கடலை மாவிலோ / வறுத்த கோதுமை மாவிலோ தயாரிக்கலாம்.

 

சர்க்கரைக்கு பதிலாகவெல்லம்/ கருப்பட்டி சேர்த்தும் இதே முறையில் தயாரிக்கலாம். மிகவும் சுவையாக இருக்கும். 

 

நெய் அதிகமாக சேர்த்தால்லட்டுகள் பிடிக்க எளிதாக வரும்ஆனால் லட்டுகள் கெட்டியாக (firm ) இருக்காது. 

 

அதே சமயத்தில்குறைவாக நெய் சேர்த்தாலும் லட்டுகள் பிடிக்க இயலாது. மாவு உதிர்ந்து விடும். ஆகையால்நெய்யினை பார்த்து அளவாக அதே சமயத்தில் சூடாகவும் சேர்க்க வேண்டும். 

 

இனிப்பு சற்று அதிகமாக தேவைப்படுபவர்கள் கப் சர்க்கரை வரை சேர்த்துக் கொள்ளலாம். 

 

திருநெல்வேலியில்இதனை நெய் உருண்டை/ பொரிகடலை லட்டு என்றும் மற்ற இடங்களில் மாலாடு என்றும் அழைப்பது வழக்கம்.