ஆப்பம்:
தேவையான பொருள்கள் :
இட்லி அரிசி : 1 கப்
பச்சரிசி : 1 கப்
உளுந்து : 1/4 கப்
வெந்தயம் : 1 மேஜைக்கரண்டி
உப்பு: தேவையான அளவு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் அரிசி, உளுந்து மற்றும் வெந்தயம் எல்லாம் சேர்த்து நன்றாக கழுவிய பின்னர் 2 - 3 மணிஊறவைத்து அதை மிக்ஸி அல்லது கிரைண்டரில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் உப்பு சேர்த்து கலந்து 7 - 8 மணி நேரம் வரை மாவினை புளிக்க வைக்க வேண்டும்.
ஆப்பமாவு இட்லி மாவினை விட சிறிது நீர்க்க இருக்க வேண்டும். ஆகையால், பொங்கிய ஆப்ப மாவோடு சிறிதுதேங்காய் பால் சேர்த்து சரியான பதத்திற்கு மாவினை கரைத்து அதனை ஆப்பம் செய்யும் கடாயில் விட்டால்சுவையான ஆப்பம் தயார்.
குறிப்புகள் :
விருப்பப்பட்டவர்கள் சமையல் சோடா சேர்த்தும் ஆப்பம் செய்யலாம்.
தேங்காய் பால் சேர்க்காமல் வெறும் தண்ணீரும் சேர்த்து ஆப்பம் செய்யலாம்.
தேங்காய் பால் சேர்ப்பதற்கு பதிலாக அரை கப் தேங்காயை மாவு அரைக்கும் போதே சேர்த்து அரைத்தும்செய்யலாம். ஆனால், இவ்வாறு தேங்காய் சேர்த்து அரைத்தால், மாவினை உடனேயே பயன்படுத்தி விடவேண்டும். இல்லையென்றால் மாவு கெட்டு விடும்.
No comments:
Post a Comment