சம்பா கோதுமை கேசரி
தேவையான பொருள்கள் :
சம்பா கோதுமை : 1 கப்
சர்க்கரை : 1 கப்
நெய் : 3 தேக்கரண்டி
பால் : 2 கப்
தண்ணீர் : 2 கப்
ஏலக்காய் பொடி : ஒரு சிட்டிகை
முந்திரிப்பருப்பு அண்ட் கிஸ்மிஸ் : 5 - 8
செய்முறை :
ஒரு குக்கரில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து, சம்பா கோதுமையை நிறம் எதுவும் மாறாமல் ஒரு இரண்டுநிமிடங்கள் மிதமான தீயில் வறுத்த பின்னர், பால் மற்றும் தண்ணீர் சேர்த்து, 2 - 3 விசில் வைத்து, நன்றாக வேகவைத்து கொள்ளவும்.
ஒரு வாணலியில், ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து முந்திரி மற்றும் கிஸ்மிஸ்க்களை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
குக்கெரை திறந்தவுடன், சூடாக இருக்கும் சம்பா கோதுமையோடு, சர்க்கரை மற்றும் வறுத்து வைத்துள்ளமுந்திரிப்பருப்பு மற்றும் கிஸ்மிஸ் சேர்த்து மேலும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து நன்றாகக் கலந்தால்சுவையான சம்பா கோதுமை கேசரி தயார்.
குறிப்புகள் :
கோதுமையை வறுக்காமலும் தயாரிக்கலாம். ஆனால், சிறிது வறுத்து தயாரிக்கும் பொழுது மணமும் சுவையும்அதிகமாக இருப்பதோடு,கோதுமை ரவை ஒன்றோடு ஒன்று ஒட்டாமலும் இருக்கும். (மிகவும் குழையாமல்இருக்கும்)
சர்க்கரைக்கு பதிலாக விருப்பமான சுவையூட்டிகளை சேர்த்து இதே முறையில் தயாரிக்கலாம்.
1 கப் கோதுமைக்கு 1 கப் சர்க்கரை என்பது அளவான இனிப்பாக இருக்கும். ஆனால், தங்களின்விருப்பத்திற்கேற்ப, சர்க்கரையின் அளவினை அதிகரித்தோ/ குறைத்தோ சேர்த்துக் கொள்ளலாம்.
பாலிற்கு பதிலாக தேங்காய் பால்/ நட் மில்க் போன்றவைகளையும் சேர்த்து தயாரிக்கலாம்.
தேங்காய் பால் சேர்ப்பதாக இருந்தால், இரண்டாம் பாலில் கோதுமையை வேக வைத்து , பின்னர் சர்க்கரைசேர்க்கும் பொழுது முதல் தேங்காய் பால் சேர்க்கவும்.
பாலின் அளவை சிறிது அதிகமாக சேர்த்து இதையே மிகவும் சுவையான கோதுமை பிரதமன்/ பாயாசமாகவும்தயாரிக்கலாம்.
No comments:
Post a Comment