கடலை கறி:
தேவையான பொருள்கள் :
கருப்பு கொண்டக்கடலை : 1 கப்
சின்ன வெங்காயம் : 5-8
பச்சை மிளகாய் : 2-3
உப்பு : தேவையான அளவு
தண்ணீர் : தேவைக்கேற்ப
வறுத்து அரைப்பதற்கு :
வெங்காயம் : 1
தக்காளி : 1
துருவிய தேங்காய் : 1/4 கப்
துருவிய இஞ்சி : 1 துண்டு
நறுக்கிய பூண்டு : 2
பட்டை : 1/4 இன்ச்
ஏலக்காய் : 1-2
கிராம்பு : 1-2
சோம்பு : 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி : 1/4 தேக்கரண்டி
மிளகாய் பொடி : 1 தேக்கரண்டி
தனியா / கொத்தமல்லி பொடி : 1 தேக்கரண்டி
கரம் மசாலா : 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை : 5-8 இலைகள்
தேங்காய் எண்ணெய் : 2 மேஜைக்கரண்டி
தாளிப்பதற்கு :
தேங்காய் எண்ணெய் : 1 தேக்கரண்டி
கடுகு : 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு : 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் : 1-2
கருவேப்பிலை : சிறிது
செய்முறை :
முதலில் கொண்டைக்கடலையை அது மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து 8 முதல் 12 மணி நேரங்கள் ஊறவைத்து, பின்னர் அதனை குக்கரில் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் வறுக்க கொடுத்துள்ள பொருள்களை ஒவ்வொன்றாகசேர்த்து நன்றாக வதக்கிய பின்னர், அதனை நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு அடி கனமான வாணலியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களைசேர்த்து தாளித்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
பின்னர் இதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின்னர் வேக வைத்துஎடுத்துள்ள கடலையை சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின்னர் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து, ஒரு 10 நிமிடங்கள் மூடி போட்டு கொதிக்க வைத்துஇறக்கினால் சுவையான கடலைக் கறி தயார்.
குறிப்புகள் :
இந்த முறையில் செய்வதற்கு காலா சென்னா என்று அழைக்கப்படும் கருப்பு கொண்டைக்கடலையை தான்பயன்படுத்துவார்கள். ஆனால், விருப்பப்பட்டால் வெள்ளை கடலையிலும் செய்யலாம்.
தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி செய்யும் சுவையும் மனமும் அருமையாக இருக்கும்.
விருப்பப்பட்டால் சிறிது தேங்காய் பாலையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இதனோடு புட்டு, இடியாப்பம், ஆப்பம், சப்பாத்தி, ரொட்டி மற்றும் புல்காவுடன் சேர்த்து சாப்பிடலாம்.
No comments:
Post a Comment