பாதாம் அல்வா:
தேவையான பொருள்கள் :
பாதாம் : 1 கப்
சர்க்கரை : 1 கப்
நெய் : 1/2 கப்
பால் : 1 கப்
குங்குமப்பூ : 1 தேக்கரண்டி
செய்முறை :
முதலில் பாதாம் பருப்புகளை சிறிது வெந்நீர் ஊற்றி 2-3 மணி நேரங்கள் ஊற வைத்து, அதனுடைய தோலை உரித்துக் கொள்ளவும்.
பின்னர் 1/4 கப் பாலில் குங்குமப்பூ சேர்த்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் மீதமுள்ள 3/4 கப் பாலை சிறுது சிறிதாக சேர்த்து பாதாம் பருப்புகளை மிக்ஸியில் நன்றாக/ மையாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு அடிகனமான வாணலியில், அரைத்த பாதாம் விழுது சர்க்கரை இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கிளறவும்.
நடுநடுவில், 1/2 கப் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து அடி பிடிக்காமல் கிளற வேண்டும்.
இறுதியாக, குங்குமப்பூ சேர்த்த பால் சேர்த்து அல்வா பதத்திற்கு கிளறினால் சுவையான பாதாம் அல்வா தயார்.
குறிப்புகள்:
பாதாம் பருப்புகளை அரைக்கும் பொழுது மொத்தமாக பால் சேர்த்து விடக்கூடாது.சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.
விருப்பப்பட்டால், 1 - 2 மேஜைக்கரண்டி கண்டென்ஸ்ட்மில்க் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் சுவை சிறிது மாறுபடும்.
நெய் இந்த அளவிற்காவது சேர்க்க வேண்டும். இல்லையேல் அல்வா பதம் சரியாக வராது. ஒரு வேளை அல்வா சிறிது பிசுபிசுப்பாக இருந்தால், இறுதியில் இன்னும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்தால் பதம் சரியாக வந்து விடும்.
இந்த அல்வாவை மிதமான தீயில் மெதுவாக கிளறி சரியான பதத்தில் இறக்கி விட வேண்டும்
No comments:
Post a Comment