Showing posts with label M. Show all posts
Showing posts with label M. Show all posts

Saturday, September 16, 2023

நெய் உருண்டை / மாலாடு (Maalaadu)

 நெய் உருண்டை / மாலாடு:


தேவையான பொருள்கள் :  

பொட்டுக்கடலை/பொரிகடலை : கப் 

சர்க்கரை : 3/4 கப் 

நெய்  : 1/2 கப் 

ஏலக்காய் : 2

உடைத்த முந்திரி பருப்புகள் :  10 to 15

 

செய்முறை : 

 

ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலையை சேர்த்து நன்றாக அரைத்து பின்னர் இந்த மாவினை சல்லடையில் சலித்து எடுத்துக் கொள்ளவும்.

 

பின்னர் அதே மிக்ஸி ஜாரில்சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்றாக பொடித்து கொள்ளவும். 

 

பின்னர் சர்க்கரை மற்றும் பொட்டுக்கடலை மாவினை கலந்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.

 

ஒரு வாணலியில் சிறிது நெய் சேர்த்துஅதில் உடைத்து வைத்துள்ள முந்திரிகளை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

 

பின்னர் மீதமிருக்கும் நெய்யை வாணலியில் சேர்த்து நன்றாக உறுக்கிக் கொள்ளவும்.

 

பின்னர் இந்த சூடான உருக்கிய நெய்யைமாவு மற்றும் சர்க்கரைக் கலவையோடு வறுத்து முந்திரிப்பருப்புகளையும் சேர்த்து ஒரு கரண்டி வைத்து நன்றாக கலந்து கொள்ளவும்.

 

கை பொறுக்கும் சூட்டிற்கு மாவு வந்தவுடன்வேகமாக லட்டுகளை பிடித்து ஒரு நிமிடங்கள் வைத்தால்சுவையான நெய் உருண்டைகள் தயார்.. 

 

குறிப்புகள் :

 

திருநெல்வேலியில் மொத்தமாக பொட்டுக்கடலைசர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து மில்லில் / மெஷினில் அரைத்து வைத்திருப்பார்கள். தேவையான பொழுதுநெய் மட்டும் சேர்த்தால்உருண்டைகள் தயார் ஆகிவிடும். இந்த மாவு 3 - 6 மாதங்கள் வரைக்கும் வைத்து பயன்படுத்தலாம். 

 

நெய் நன்றாக சூடாக இருக்க வேண்டும். நெய்யினுடைய சூட்டில்சர்க்கரை இளகிமாவானது லட்டுகள் பிடிக்க திரண்டு வரும். 

 

பொட்டுக்கடலைக்கு பதிலாகபாசிப்பருப்பை வறுத்து பொடித்தோ/ வறுத்த கடலை மாவிலோ / வறுத்த கோதுமை மாவிலோ தயாரிக்கலாம்.

 

சர்க்கரைக்கு பதிலாகவெல்லம்/ கருப்பட்டி சேர்த்தும் இதே முறையில் தயாரிக்கலாம். மிகவும் சுவையாக இருக்கும். 

 

நெய் அதிகமாக சேர்த்தால்லட்டுகள் பிடிக்க எளிதாக வரும்ஆனால் லட்டுகள் கெட்டியாக (firm ) இருக்காது. 

 

அதே சமயத்தில்குறைவாக நெய் சேர்த்தாலும் லட்டுகள் பிடிக்க இயலாது. மாவு உதிர்ந்து விடும். ஆகையால்நெய்யினை பார்த்து அளவாக அதே சமயத்தில் சூடாகவும் சேர்க்க வேண்டும். 

 

இனிப்பு சற்று அதிகமாக தேவைப்படுபவர்கள் கப் சர்க்கரை வரை சேர்த்துக் கொள்ளலாம். 

 

திருநெல்வேலியில்இதனை நெய் உருண்டை/ பொரிகடலை லட்டு என்றும் மற்ற இடங்களில் மாலாடு என்றும் அழைப்பது வழக்கம்.

Thursday, December 23, 2021

மொச்சை (Mochchai sundal)

  மொச்சை 




தேவையான பொருள்கள் :


மொச்சை : 1/2 கப் 

கடலை மாவு : 1/4 கப்

நறுக்கிய வெங்காயம் : 1-2

நறுக்கிய பச்சை மிளகாய் : 3-4 

பொடியாக நறுக்கிய இஞ்சி : 1 தேக்கரண்டி 

பெருங்காயம் : ஒரு சிட்டிகை

கருவேப்பிலை : ஒரு கொத்து 


தாளிப்பதற்கு :


கடுகு : 1 தேக்கரண்டி 

உளுந்து : 1 தேக்கரண்டி



செய்முறை :


மொச்சை பயிரை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு குக்கரில் நன்றாக ஊறியுள்ள மொச்சை பயிரைச் சேர்த்துஅது முழுகும் வரை தண்ணீர் சேர்த்து ஒரு 4-5 விசில்வைத்து எடுத்துக் கொள்ளவும்

ஒரு வாணலியில்தாளிக்க கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து தாளித்த பின்னர்,வெங்காயம்பச்சைமிளகாய்இஞ்சிகருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.பின்னர் வேக வைத்த மொச்சை பயிரைசேர்த்து நன்றாக கிளறவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து எடுத்துக்கொள்ளவும்.பின்னர் இதனை மொச்சைப் பயிரோடு கலந்து கடலை மாவின் பச்சை வாசனை போகும் வரைகொதிக்கவைத்து இறக்கினால் சுவையான மொச்சை தயார்.


குறிப்புகள் :


பெரிய வெங்காயத்திற்கு பதிலாக சின்ன வெங்காயம் சேர்த்தும் செய்யலாம்.

இதனை மாலை நேரத்தில் தேநீர் அல்லது காபியோடு சாப்பிடலாம்.

ரசம் மற்றும் சாம்பார் சாதத்தோடும் சாப்பிடலாம்.

முளைக்கட்டிய பச்சைப்பயிறு சப்ஜி (Moong sprouts subzi )

 முளைக்கட்டிய பச்சைப்பயிறு சப்ஜி 



தேவையான பொருளகள் : 


முளைக்கட்டிய பச்சைப்பயிறு : கப் 

நறுக்கிய தக்காளி : கப் 

நறுக்கிய வெங்காயம் : கப் 

மிளகாய்த்தூள் : தேக்கரண்டி 

மஞ்சள்தூள் : தேக்கரண்டி 

இஞ்சி பூண்டு விழுது : தேக்கரண்டி 

பெருங்காயம் : ஒரு சிட்டிகை 

எலுமிச்சை சாறு : தேக்கரண்டி 

நறுக்கிய கொத்தமல்லித் தளைகள் : சிறிதளவு 

உப்பு : தேவைக்கேற்ப 


தாளிப்பதற்கு 


எண்ணெய் : மேஜைக்கரண்டி 

சீரகம் : தேக்கரண்டி 


செய்முறை : 


முதலில் ஒரு குக்கரில் முளைக்கட்டிய பயிரோடுஅது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்துமூன்றிலிருந்துநான்கு விசில் வைத்து வேகா வைத்து எடுத்துக்கொள்ளவும்


ஒரு அடி கனமான வாணலியில்எண்ணெய் சேர்த்து சீரகம் தாளித்த பின்னர்வெங்காயம் சேர்த்து பொன்நிறமாகும் வரை வதக்கிக்கொள்ளவும் 


பின்னர் அதனோடு தக்காளி சேர்த்து வதக்கிக்கொள்ளவும் 


தக்காளி நன்றாக வதங்கியவுடன்அதனோடு வேக வைத்துள்ள பயிறு,  மசாலா பொருள்கள் மற்றும் தண்ணீர்சேர்த்து ஒன்றாக கலந்து ஒரு நிமிடங்கள் வரை மூடி போட்டு வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்


அடுப்பை அணைத்து விட்டுஇதில் எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லித் தளைகள் சேர்த்துக் கிளறினால்சுவையான முளைக்கட்டிய பச்சை பயிறு சப்ஜி தயார் 


குறிப்புகள் : 


பச்சை பயிரை முளைக்கட்டாமலும் இதே முறையில் தயாரிக்கலாம் 


பச்சைப்பயிருக்கு பதிலாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பயிறு வகைகள் சேர்த்து இதே முறையில்செய்யலாம் 


 விருப்பப்பட்டால்  கரம்மசாலா சேர்த்துக்கொள்ளலாம் 


இதனை சாதம்சப்பாத்திரொட்டி மற்றும் புல்காவுடன் சேர்த்துப் பரிமாறலாம் 

Monday, December 21, 2020

மாங்காய் தொக்கு : (raw Mango thokku / mango pickle)



மாங்காய் தொக்கு :


தேவையான பொருள்கள்:


மாங்காய் : 2

மிளகாய் பொடி : 2- 3 தேக்கரண்டி 

மஞ்சள் பொடி : 1/4 தேக்கரண்டி 

வெந்தயம் : 1/4 தேக்கரண்டி 

பெருங்காயம் : 1/4 தேக்கரண்டி 

பொடித்த வெல்லம் : 1/2 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)

உப்பு : தேவையான அளவு 

நல்லெண்ணெய் : 4 மேஜைக்கரண்டி 

கடுகு : 1 தேக்கரண்டி 


செய்முறை:


முதலில் வெந்தயத்தை ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்துசிறிது ஆறிய பின்னர் அதனை பொடித்துஎடுத்து வைத்துக் கொள்ளவும்.


மாங்காய்களை தோல் நீக்கிய பின்னர்,அதனை துருவி எடுத்துக்கொள்ளவும்

(கேரட் துருவியை வைத்தோவெஜிடபிள் ஸ்லைசர் / கட்டர் வைத்தோ துருவிக்கொள்ளவும்)


ஒரு அடி கனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் பெருங்காயம் தாளித்த பின்னர்துருவியமங்கை சேர்த்து ஒரு 2 - 3 நிமிடங்கள் வரை வதக்கவும்


மாங்காய் சிறிது வதங்கிய பின்னர்அதனோடு மிளகாய் பொடிமஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்றாககலந்து வதக்கி கொள்ளவும்.


தேவைப்பட்டால்சிறிது நல்லெணெய் ஊற்றி ஒரு 4 நிமிடங்கள் வரை வதக்கிக் கொள்ளவும்


இறுதியாக பொடித்த வெந்தயத்தை சேர்த்து பின்னர் பொடித்த வெல்லம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கினால்எண்ணெய் பிரிந்து தொக்கும் திரண்டு வரும் பதத்தில் அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான மாங்காய்தொக்கு தயார்.


குறிப்புகள் :


வெந்தயத்தை வறுத்து பொடித்து சேர்ப்பதற்கு பதிலாகவெந்தயத்தை கடுகு தாளிக்கும் பொழுது அப்படியேசேர்த்தும் தொக்கு தயாரிக்கலாம்.


தொக்கு செய்வதற்கு கொஞ்சம் புளிப்பு அதிகமாக இருக்கும் மாங்காய்களை பார்த்து தேர்வு செய்தால்மிகவும்சுவையாக இருக்கும்உதாரணமாககிளிமூக்கு மாங்காய் உபயோகிக்கலாம்


எங்கள் வீட்டில் நல்லெணெய் தான் ஊற்றி தொக்கு செய்வோம்.மேலும் இந்தளவு எண்ணெய்யும் கட்டாயம்சேர்க்க வேண்டும்


தொக்கு செய்யும் பொழுது மிதமான தீயில் மட்டுமே வைத்து பொறுமையாக மாங்காயை வதக்கிக் கொள்ளவும்


தொக்கினுடைய மேற்பகுதியில் எப்பொழுதும் எண்ணெய் நிற்குமாறு பார்த்துக்கொள்ளவும்ஓரிரு நாளுக்கு ஒருமுறை தொக்கை நன்றாக ஒரு ஈரப்பத்தமில்லாத கரண்டியினால் கிளறி விட்டுக்கொள்ளவும்இவ்வாறுசெய்வதால்தொக்கின் மேற்பகுதியில் வரும் பூஞ்சைகளை (fungus ) தவிர்க்கலாம்


அதேபோன்றுதொக்கு நன்றாக ஆறிய பின்னர்ஒரு நல்ல சுத்தமான ஈரமில்லாத காற்றுப்புகாத முடிந்தவரைகண்ணாடிப் பாத்திரத்தில் ஸ்டோர் செய்துஅதே போல் ஈரமில்லாத கரண்டியும் உபயோகித்து கொள்ளவும்


இவ்வாறு செய்து பின்னர் இதனை குளிர்பதனப்பெட்டியிலும் வைத்தால்  - 2 மாதங்கள் வரைபயன்படுத்தலாம்