Showing posts with label Lunch Recipe. Show all posts
Showing posts with label Lunch Recipe. Show all posts

Saturday, September 16, 2023

கடலை கறி (Kadalai kari/curry )

 கடலை கறி:


தேவையான பொருள்கள் :

 

கருப்பு கொண்டக்கடலை : கப் 

சின்ன வெங்காயம் : 5-8

பச்சை மிளகாய் : 2-3

உப்பு : தேவையான அளவு 

தண்ணீர் : தேவைக்கேற்ப 

 

வறுத்து அரைப்பதற்கு :

 

வெங்காயம் : 1

தக்காளி : 1

துருவிய தேங்காய் : 1/4 கப் 

துருவிய இஞ்சி : துண்டு 

நறுக்கிய பூண்டு : 

பட்டை : 1/4 இன்ச் 

ஏலக்காய் : 1-2 

கிராம்பு : 1-2

சோம்பு : தேக்கரண்டி

மஞ்சள் பொடி :  1/4 தேக்கரண்டி 

மிளகாய் பொடி : தேக்கரண்டி 

தனியா / கொத்தமல்லி பொடி : தேக்கரண்டி 

கரம் மசாலா : 1/2 தேக்கரண்டி 

கருவேப்பிலை : 5-8 இலைகள் 

தேங்காய் எண்ணெய் : மேஜைக்கரண்டி 

 

தாளிப்பதற்கு : 

 

தேங்காய் எண்ணெய் : தேக்கரண்டி 

கடுகு : 1/2 தேக்கரண்டி 

உளுத்தம்பருப்பு : 1/2 தேக்கரண்டி 

காய்ந்த மிளகாய் : 1-2 

கருவேப்பிலை : சிறிது 

 

செய்முறை :

 

முதலில் கொண்டைக்கடலையை அது மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து முதல் 12 மணி நேரங்கள் ஊறவைத்துபின்னர் அதனை குக்கரில் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

 

ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றிஅதில் வறுக்க கொடுத்துள்ள பொருள்களை ஒவ்வொன்றாகசேர்த்து நன்றாக வதக்கிய பின்னர்அதனை நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

 

ஒரு அடி கனமான வாணலியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களைசேர்த்து தாளித்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

 

பின்னர் இதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின்னர் வேக வைத்துஎடுத்துள்ள கடலையை சேர்த்து கலந்து கொள்ளவும். 

 

பின்னர் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்துஒரு 10 நிமிடங்கள் மூடி போட்டு கொதிக்க வைத்துஇறக்கினால் சுவையான கடலைக் கறி தயார். 

 

குறிப்புகள் :

 

இந்த முறையில் செய்வதற்கு காலா சென்னா என்று அழைக்கப்படும் கருப்பு கொண்டைக்கடலையை தான்பயன்படுத்துவார்கள். ஆனால்விருப்பப்பட்டால் வெள்ளை கடலையிலும் செய்யலாம்.

 

தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி செய்யும் சுவையும் மனமும் அருமையாக இருக்கும்.

 

விருப்பப்பட்டால் சிறிது தேங்காய் பாலையும் சேர்த்துக் கொள்ளலாம்.

 

இதனோடு புட்டுஇடியாப்பம்ஆப்பம்சப்பாத்திரொட்டி மற்றும் புல்காவுடன் சேர்த்து சாப்பிடலாம்.

 




உளுத்தம்பருப்பு சாதம்/கருப்பு உளுந்து சாதம் (Black Urad Dal rice/ Ulutham paruppu Satham)

 உளுத்தம்பருப்பு சாதம்/கருப்பு உளுந்து சாதம் 



தேவையான பொருள்கள் :

புழுங்கல் அரிசி : கப்

கருப்பு உளுந்தம் பருப்பு : 1/4 கப்

வெந்தயம் : தேக்கரண்டி

பூண்டு பற்கள் : 4-5

தேங்காய்த்துருவல் : 1/2 கப்

தண்ணீர் : 3.5 - 4 கப்

நல்லெண்ணெய் :  2 டீஸ்பூன்

உப்பு : தேவையான அளவு

 

செய்முறை :

 

ஒரு அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து லேசாக சூடாக்கி அதில் வெந்தயத்தை சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.

 

வெந்தயம் லேசாக வெடிக்க ஆரம்பித்ததும்கருப்பு உளுந்தம் பருப்பை சேர்த்து நன்கு  வாசனை வரும் வரை வறுத்துக்கொள்ளவும்.

 

ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசியோடு வறுத்த பருப்பையும் சேர்த்து நன்கு கழுவி விட்டுசிறிது தண்ணீர் ஊற்றி  ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும்.

 

ஒரு பிரஷர் குக்கரில் ஊறவைத்த அரிசிபருப்புவெந்தயம்பூண்டுதேங்காய் துருவல்உப்புமற்றும் நல்லெண்ணெய் சேர்த்துமேலும் 3.5 - 4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.

 

குக்கரை மூடி வைத்து 3 -  4 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்தால் சுவையான உளுத்தம் பருப்பு சாதம் தயார்.

 

குறிப்புகள் :

 

இந்த சாதம் தயாரிப்பதற்குஉடைத்த கருப்பு உளுந்து தான் உபயோகிப்பார்கள். ஆனால்தோல் நீக்கப்பட்ட வெள்ளை உளுந்திலும் தயாரிக்கலாம்.

 

இந்த சாதத்தோடு நல்ல எண்ணெய் சேர்த்து எள்ளு தொகையல் சேர்த்து  பரிமாறுவார்கள்.

 

எங்கள் வீட்டில் இந்த சாதத்தோடு கொஞ்சம் நல்ல எண்ணெய் ஊற்றிகருப்பட்டி தொட்டும் சாப்பிடுவோம்..

 

இதனோடு எள்ளு தொகையல்தேங்காய் தொகையல்அவியல்வத்தல்/வடகம் மற்றும் சில நேரங்களில் கீரை பொரியல் வைத்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

 

இதுவும் ஒரு திருநெல்வேலி ஸ்பெஷல் ரெசிபி..

Thursday, December 23, 2021

இரு புளிக்குழம்பு (Iru pulikulambu)

 இரு புளிக்குழம்பு : 



நறுக்கிய முருங்கைக்காய் : 1 

புளி : 1 நெல்லிக்காய் அளவு 

மோர் : 1 கப் 

மஞ்சள் பொடி : 1/4 தேக்கரண்டி 

உப்பு : தேவையான அளவு 


அரைப்பதற்கு : 


தேங்காய் எண்ணெய் : 1 தேக்கரண்டி 

உளுந்தம் பருப்பு : 2 தேக்கரண்டி 

வெந்தயம் : 1/4 தேக்கரண்டி 

காய்ந்த மிளகாய் : 5 - 6

துருவிய தேங்காய் : 1/2 கப் 


தாளிப்பதற்கு  

தேங்காய் எண்ணெய் : 1 தேக்கரண்டி 

கடுகு : 1 தேக்கரண்டி 

உளுத்தம் பருப்பு : 1 தேக்கரண்டி 

காய்ந்த மிளகாய் : 1

கருவேப்பிலை : சிறிதளவு 




செய்முறை : 


முதலில் புளியை ஊற வைத்து புளிக்கரைசலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.


ஒரு வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றிதேங்காய் தவிர்த்து மற்ற அரைப்பதற்கு கொடுத்துள்ளபொருள்களை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் தேங்காய் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.


ஒரு அடி கனமான வாணலியில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து தாளித்த பின்னர்நறுக்கியமுருங்கையை சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்


காய் வெந்தவுடன் அதனுடன்  புளிக்கரைசலை சேர்த்து புளியின் பச்சை வாசனை போகும் வரைக்கும் கொதிக்கவைக்க வேண்டும்.


பின்னர் இதனோடு அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து கலந்த பின்னர்கடைந்து வைத்துள்ளமோரை கலந்து பொங்கி வரும் வரை கொதிக்க வைத்து எடுத்தால் சுவையான இரு புளிக்குழம்பு தயார்.


குறிப்புகள் : 


இந்த குழம்பில் இரண்டு விதமான புளிப்புகள் சேர்ப்பதால் இதற்கு இரு புளிக்குழம்பு என்று பெயர்இதுவும் ஒருதிருநெல்வேலி ஸ்பெஷல் குழம்பு


இது பார்ப்பதற்கு மோர்க்குழம்பு போன்று இருந்தாலும் இதனுடைய ருசி தனியாக இருக்கும்.


வறுத்து அரைப்பதற்கு , உளுத்தம் பருப்பிற்கு பதிலாக இரண்டு தேக்கரண்டி துவரம் பருப்பை / கடலைபருப்பை வறுத்து அரைத்துச் செய்யலாம்.


இந்த குழம்பில்முருங்கை காய்க்கு பதிலாக வெள்ளை பூசணிக்காய்சின்ன வெங்காயம்கத்திரிக்காய்ஆகியவற்றுள் ஏதேனும் ஒரு காய் சேர்த்து இதே முறையில் தயாரிக்கலாம்.


மோர் சேர்த்த பின்னர்மிகவும் கொதிக்க விட கூடாது அவ்வாறு செய்தால் மோர் திரிந்து விடும்.

புளி இல்லா கறி/ குழம்பு (Puli Illa curry)

 புளி இல்லா கறிகுழம்பு : 





தேவையான பொருட்கள்

துவரம்பருப்பு : 1/4 கப்

முருங்கைக்கீரை : 1 கப்

முருங்கைக்காய் : 1 (2 இன்ச் துண்டுகளை நறுக்கியது )

கத்திரிக்காய்  : 1 (விருப்பப்பட்டால் ) 

மஞ்சள்தூள் :  1/4 தேக்கரண்டி

உப்பு :  தேவையான அளவு


அரைப்பதற்கு தேவையான பொருள்கள் : 


தேங்காய் துருவல் : 2 மேஜைக்கரண்டி 

சீரகம் : 1 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் : 4 

மிளகு :  2 தேக்கரண்டி

கறிவேப்பிலை : 10 இலைகள்

சின்ன வெங்காயம் : 3

பூண்டு பற்கள் : 2


தாளிப்பதற்கு : 


கடுகு : 1/2 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு :  1/2 தேக்கரண்டி

சீரகம் :  1/2 தேக்கரண்டி

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் : 1 மேஜைக்கரண்டி 

நெய்தேங்காய் எண்ணெய் : 1 தேக்கரண்டி 


செய்முறை : 


துவரம்பருப்பை நன்கு கழுவி விட்டுசிறிது நேரம் ஊறவைத்து குக்கரில் 4 விசில் வரும் வரை வேகவைத்துஎடுக்கவும்.


வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் அதில் மிளகுசீரகம்மிளகாய் வற்றல்கறிவேப்பிலைசேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.


அவை அறிய பின் ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் சேர்த்து சின்ன வெங்காயம்பூண்டு பற்கள்தேங்காய் துருவல்சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.


ஒரு வாணலியில்தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து தாளித்த பின்னர்நறுக்கியகத்திரிக்காய்முருங்கைக்காய் மற்றும்  முருங்கைக்கீரை சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.


காய்கள் மற்றும் கீரை பாதி வெந்ததும்வேக வைத்துள்ள பருப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.


பின் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துகொதிக்க விட்டு இறக்கினால் சுவையான புளி இல்லா குழம்பு தயார் 


குறிப்பு


பெயரிற்கு ஏற்றாற்போல் , இந்த குழம்பில் புளி / தக்காளி போன்ற எந்த புளிப்பும் சேர்ப்பதில்லை இதுதிருநெல்வேலியின் ஒரு சிறப்பான குழம்பு (ஸ்பெஷல் குழம்பு


துவரம் பருப்பிற்கு பதிலாக பாசிப்பருப்பு சேர்த்தும் இதே முறையில் இந்த குழம்பினை தயாரிக்கலாம்


கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காய் மட்டும் தான் இந்த குழம்பில் சேர்த்து செய்வோம் காய்கள் இல்லாமலும்வெறும் கீரை மட்டும் சேர்த்தும் தயாரிக்கலாம் 


மிளகு சேர்க்காமல் வெறும் காய்ந்த மிளகாய் மட்டுமே சேர்த்தும் தயாரிக்கலாம் 


முருங்கைக்கீரை கண்டிப்பாக சேர்க்க வேண்டும் ஆனால்அதிக அளவு சேர்க்க வேண்டாம்


இந்த குழம்பை அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது.