Showing posts with label traditional rice recipe. Show all posts
Showing posts with label traditional rice recipe. Show all posts

Saturday, September 16, 2023

உளுத்தம்பருப்பு சாதம்/கருப்பு உளுந்து சாதம் (Black Urad Dal rice/ Ulutham paruppu Satham)

 உளுத்தம்பருப்பு சாதம்/கருப்பு உளுந்து சாதம் 



தேவையான பொருள்கள் :

புழுங்கல் அரிசி : கப்

கருப்பு உளுந்தம் பருப்பு : 1/4 கப்

வெந்தயம் : தேக்கரண்டி

பூண்டு பற்கள் : 4-5

தேங்காய்த்துருவல் : 1/2 கப்

தண்ணீர் : 3.5 - 4 கப்

நல்லெண்ணெய் :  2 டீஸ்பூன்

உப்பு : தேவையான அளவு

 

செய்முறை :

 

ஒரு அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து லேசாக சூடாக்கி அதில் வெந்தயத்தை சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.

 

வெந்தயம் லேசாக வெடிக்க ஆரம்பித்ததும்கருப்பு உளுந்தம் பருப்பை சேர்த்து நன்கு  வாசனை வரும் வரை வறுத்துக்கொள்ளவும்.

 

ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசியோடு வறுத்த பருப்பையும் சேர்த்து நன்கு கழுவி விட்டுசிறிது தண்ணீர் ஊற்றி  ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும்.

 

ஒரு பிரஷர் குக்கரில் ஊறவைத்த அரிசிபருப்புவெந்தயம்பூண்டுதேங்காய் துருவல்உப்புமற்றும் நல்லெண்ணெய் சேர்த்துமேலும் 3.5 - 4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.

 

குக்கரை மூடி வைத்து 3 -  4 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்தால் சுவையான உளுத்தம் பருப்பு சாதம் தயார்.

 

குறிப்புகள் :

 

இந்த சாதம் தயாரிப்பதற்குஉடைத்த கருப்பு உளுந்து தான் உபயோகிப்பார்கள். ஆனால்தோல் நீக்கப்பட்ட வெள்ளை உளுந்திலும் தயாரிக்கலாம்.

 

இந்த சாதத்தோடு நல்ல எண்ணெய் சேர்த்து எள்ளு தொகையல் சேர்த்து  பரிமாறுவார்கள்.

 

எங்கள் வீட்டில் இந்த சாதத்தோடு கொஞ்சம் நல்ல எண்ணெய் ஊற்றிகருப்பட்டி தொட்டும் சாப்பிடுவோம்..

 

இதனோடு எள்ளு தொகையல்தேங்காய் தொகையல்அவியல்வத்தல்/வடகம் மற்றும் சில நேரங்களில் கீரை பொரியல் வைத்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

 

இதுவும் ஒரு திருநெல்வேலி ஸ்பெஷல் ரெசிபி..

Thursday, December 23, 2021

நெய் சாதம் (Ghee Rice)

நெய் சாதம் :





தேவையான பொருள்கள் : 


பாஸ்மதி அரிசி : 1 கப் 

நெய் : 2 -  3 மேஜைக்கரண்டி 

நறுக்கிய வெங்காயம் : 1

முந்திரி பருப்பு : 8 - 10

தண்ணீர் : தேவைக்கேற்ப 

உப்பு : தேவைக்கேற்ப 


தாளிப்பதற்கு : 

பிரியாணி இல்லை : 1

பட்டை : 1 இன்ச் 

ஏலக்காய் : 2

கிராம்பு : 5

மிளகு : ½ தேக்கரண்டி 

பச்சை மிளகாய் : 1 



செய்முறை :


முதலில் பாசுமதி அரிசியை நன்றாக களைந்து விட்டுஒரு முப்பது நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.


ஒரு குக்கரில் நெய் சேர்த்து முந்திரி பருப்புகளை பொரித்து தனியாக எடுத்துக் கொள்ளவும்


பின்னர் அதே குக்கரில் மீதமிருக்கும் நெய்யில்தாளிக்க கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து தாளித்தபின்னர்வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.


வெங்காயம் சிறிது வதங்கியவுடன் ஊற வைத்த அரிசியை தண்ணீரை வடித்து விட்டு சேர்த்துஅரிசியையும்நெய்யில் மசாலா மற்றும் வெங்காயத்தோடு சேர்த்து சிறிது வதக்கி கொள்ளவும்


பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கெரை மூடி 2 விசில் விட்டு இறக்கிய பின்னர் வறுத்துவைத்துள்ள முந்திரி சேர்த்து கலந்தால் சுவையான நெய் சாதம் தயார்


குறிப்புகள் : 


பொதுவாக ஊற வைத்த பாசுமதி அரிசிக்கு 1.5 - 1.75 கப்  தண்ணீர் என்ற அளவே போதுமானதுஇருந்தாலும்ஒவ்வொரு பிராண்ட் அரிசிக்கும் சிறு வேறுபாடுகள் இருக்கலாம்அதற்கு தகுந்தாற் போன்று தண்ணீரின்அளவை அதிகரித்தோ அல்லது குறைத்தோ சேர்த்துக் கொள்ளவும்.


முந்திரியோடு சிறிது கிஸ்மிஸ் சேர்த்தும் இந்த நெய் சாதத்தை அலங்கரிக்கலாம்.


சிறிது வறுத்த வெங்காயத்தை இறுதியில் சேர்த்தால்மிகவும் சுவையாக இருக்கும்


இந்த நெய் சாதத்தை அப்டியே சாப்பிடலாம் அல்லது சிறிது டால் (பருப்பு குழம்பு) / குருமாவோடு சேர்த்துபரிமாறலாம்.

கூட்டாஞ்சோறு (Koottanchoru)

கூட்டாஞ்சோறு 



தேவையான பொருள்கள் : 


அரிசி : 1 கப் 

துவரம் பருப்பு : 1/2 கப் 

புளி  :  சிறிய எலுமிச்சம் பழம் அளவு

மஞ்சள் பொடி :  1/2 தேக்கரண்டி 

பெருங்காயம் : 1 தேக்கரண்டி 

தண்ணீர் : தேவையான அளவு 

உப்பு : தேவையான அளவு 


அரைப்பதற்கு :

துருவிய தேங்காய் : கால் கப் 

காய்ந்த மிளகாய் : 8 - 10

சின்ன வெங்காயம் : 12

பூண்டு : 8

சீரகம் : 1 தேக்கரண்டி 


நறுக்கிய காய்கறிகள் : 


உருளைக்கிழங்கு : 1 (பெரியது)

கேரட் : 2 

பீன்ஸ் : 10 

அவரைக்காய் :  10

வாழைக்காய் : 1 

மாங்காய் : 1

கத்திரிக்காய் : 3

முருங்கைக்காய் : 1 

முருங்கை இலைகள் :  ஒரு கைப்பிடி 


தாளிப்பதற்கு : 

நல்லெண்ணெய் : 2 மேஜைக்கரண்டி 

கடுகு : 1 தேக்கரண்டி 

உளுத்தம்பருப்பு : 1 தேக்கரண்டி 

வெங்காய வடகம் : 2-3

கருவேப்பிலை : 10


செய்முறை : 


அரிசி மற்றும் பருப்பைக் களைந்து ஒரு அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும் 


அனைத்து காய்கறிகளையும் சற்று பெரிய நீளத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் 


புளியைக் கரைத்து புளி கரைசலை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும் 


ஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாயோடு தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும் 


பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய்சின்ன வெங்காயம் , பூண்டு மற்றும் சீரகம் சேர்த்து அரைத்து தனியாகஎடுத்து வைத்துக் கொள்ளவும் 


பின்னர்குக்கரில் ஊற வைத்த அரிசிபருப்புநறுக்கிய காய்கறிகள் தேவையான தண்ணீர் சேர்த்துசிறிதுகொதிக்க விட வேண்டும் 


காய்கறிகள் மற்றும் அரிசி பாதி வெந்தவுடன் அதனுடன் புளிக்கரைசல்அரைத்து வைத்துள்ள விழுதுகள்மமஞ்சள் பொடிபெருங்காயம் மற்றும் தேவையான உப்பு சேர்த்து குக்கரை மூடி விசில் வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும் 


ஒரு வாணலியில்சிறிது எண்ணெய் சேர்த்து வெங்காய வடகங்களை பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்


மற்றொரு வாணலியில்சிறிது எண்ணெய் சேர்த்து தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களை சேர்த்துதாளித்துக் கொள்ளவும் 


தாளித்த பொருள்களை சாதத்தில் சேர்த்து கலந்தால் சுவையான கூட்டாஞ்சோறு தயார் 


 குறிப்புகள் : 


மாங்காய் சேர்க்கவில்லையென்றால் , புளியின் அளவை அதிகரித்து கொள்ளவும்


இதனோடு கூழ்வத்தல்/வடகம் , அப்பளம் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும் 


இது குளிர் சாதனப்பெட்டியில் வைக்காமலேயே ஒரு நாள் முழுவதும் கெடாமல் இருக்குமாகையால்இதனைசுற்றுலா செல்லும் போது செய்து எடுத்து செல்லலாம் 


எனக்கு முருங்கையிலை கிடைக்காததால் நான் அதை சேர்க்கவில்லை

ஆனால்கண்டிப்பாக முருங்கையிலை சேர்த்து செய்து ருசியுங்கள்