Tuesday, December 22, 2020

பிளைன் சால்னா (Plain Salna )


பிளைன் சால்னா


தேவையான பொருள்கள்: 


வெங்காயம் : 1

தக்காளி : 2

சோம்பு : 1 மேஜைக்கரண்டி

மிளகு : 1/2 தேக்கரண்டி 

பட்டை : 1  இன்ச்

ஏலக்காய் : 2

ஜீரகம் : 1 தேக்கரண்டி 

பூண்டு : 2

இஞ்சி  : 1/2 இன்ச் 

பச்சைமிளகாய் : 1

சிகப்பு மிளகாய் பொடி : 1/2 தேக்கரண்டி 

தனியா பொடி : 1 மேஜைக்கரண்டி 

மஞ்சள் பொடி : 1/4 தேக்கரண்டி 

துருவிய தேங்காய் : 1/4 cup

முந்திரிப்பருப்புகள் / பொட்டுக்கடலை : 1 மேஜைக்கரண்டி 

எண்ணெய் : 3 மேஜைக்கரண்டி 


செய்முறை:


ஒரு அடி கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றிஅதில் தேங்காய் மற்றும் முந்திரி தவிர மீதி இருக்கும்பொருள்களை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்


இறுதியாகதேங்காய் சேர்த்து அடுப்பை அனைத்துவறுத்த கலவை நன்றாக ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரிலிட்டுதேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்தால் சுவையான பிளைன் சால்னா தயார்.


பின்னர் விருப்பப்பட்டால் முழு கரம் மசாலா தாளித்து கொள்ளலாம்


குறிப்புகள்:


முந்திரிப்பருப்புகளுக்கு பதிலாக பொட்டுக்கடலையோ / கசகசாவோ சேர்த்துக் கொள்ளலாம்


விருப்பப்பட்டால்வேகவைத்த காய்கறிகள் / பன்னீர் சேர்த்தும் இதே முறையில் சால்னா தயாரிக்கலாம்


இந்த பிளைன் சால்னாவை பரோட்டாரொட்டி/புல்காஇட்லி /தோசைகளோடு சாப்பிட மிகவும் அருமையாகஇருக்கும்

உளுத்தம் பருப்பு கருப்பட்டிப் பாயசம் (Uluntham paruppu payasam / urad dhal kheer)

 உளுத்தம் பருப்பு கருப்பட்டிப் பாயசம்



தேவையான பொருள்கள்:


உளுத்தம்பருப்பு : கால் கப்

கருப்பட்டி : அரை கப்

பால் : ஒண்ணே கால் கப்

சுக்கு  பொடி : 1 சிட்டிகை


செய்முறை:


உளுத்தம் பருப்பை சுமார் இரண்டில் இருந்து மூன்று மணி நேரம் வரை நன்றாக ஊற வைக்கவும்

ஊற வைத்த பருப்பை குக்கெரில் போட்டு 4 விசில்க்கு வேக வைக்கவும்

சிறிது ஆறியவுடன்ஒரு ப்ளெண்டரில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்

கருப்பட்டியை சிறிது தண்ணீர் ஊற்றிக் கரைத்து வடிகட்டி அரைத்த உளுந்துடன் சேர்த்துக் கொள்ளவும்

இதனுடன் சுக்குப் பொடியை சேர்த்து பின்னர் காய்ச்சிய பாலையும் serthu சுவையான உளுத்தம் பருப்பு பாயசம்தயார்


குறிப்புகள்:


கருப்பட்டிக்கு பதிலாக சக்கரைவெல்லம் சீனி போன்ற எந்த சுவையூட்டியையும் சேர்க்கலாம்.


பாலுக்கு பதிலாக நட் மில்க்தேங்காய் பால் போன்றவைகளையும் உபயோகப்படுத்தலாம்.


டோக்ளா (Dhokla)

 

டோக்ளா:


தேவையான பொருள்கள்:


கடலை மாவு : 1 கப் 

ரவை : 3 தேக்கரண்டி 

பொடியாக நறுக்கிய / துருவிய இஞ்சி : 1 இன்ச் 

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் : 2

சர்க்கரை : 1 தேக்கரண்டி 

மஞ்சள் பொடி : 1/4 தேக்கரண்டி 

பெருங்காயம் : 1 பின்ச் 

எலுமிச்சம் பழச்சாறு : 1-2 தேக்கரண்டி 

உப்பு : தேவையான அளவு 

தண்ணீர் : 1 கப்  

இனோ (Eno) பழ உப்பு / பேக்கிங் சோடா : 1/2 தேக்கரண்டி 

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தளைகள் : 2 மேஜைக்கரண்டி 

துருவிய தேங்காய் : சிறிது 


தாளிப்பதற்கு:


எண்ணெய் : 2 தேக்கரண்டி 

கடுகு : 1 தேக்கரண்டி 

சீரகம் : 1 தேக்கரண்டி   

எள்ளு : 1 தேக்கரண்டி 

பெருங்காயம் : 1 பின்ச் 

கருவேப்பிலை : சிறிது 

கீறிய பச்சை மிளகாய் : 2

சர்க்கரை : 1 தேக்கரண்டி 

உப்பு : 1/4 தேக்கரண்டி 

தண்ணீர் : 1/4 கப்

எலுமிச்சம் பழச்சாறு : 1 தேக்கரண்டி 


செய்முறை :


முதலில்ஒரு சல்லடையில் கடலை மாவு மற்றும் ரவையை சேர்த்து நன்றாக சலித்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.


பின்னர் அதனுடன்இஞ்சிபச்சை மிளகாய்மஞ்சள் பொடிசர்க்கரைஉப்புபெருங்காயம்எலுமிச்சம்பழச்சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கைகளால் நன்றாக கலந்து விடவும்.


பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து ஒரு 20 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ளவும்.


ஒரு steameril/ இட்லி செய்யும் பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ளவும்


ஒரு தட்டில் சிறிது எண்ணெய் தடவி எடுத்து கொள்ளவும்


மேலே தயாரித்து ஊற வைத்துள்ள மாவில் இப்பொழுது eno / பேக்கிங் சோடா சேர்த்து கலந்த பின்னர்எண்ணெய் தடவிய தட்டில் இந்த மாவினை ஊற்றி ஆவியில் ஒரு 10 - 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்துஒருநிமிடங்கள் சிறிது ஆறவிட்டு பின்னர் அதனை ஒரு கத்தியினால் விருப்பமான வடிவத்தில் சிறு சிறுதுண்டுகளாக வெட்டி கொள்ளவும்.


ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகசேர்த்துஇறுதியாக அதில் கால் கப் தண்ணீர் சேர்த்து கொதித்த பின்னர் அதனுடன் எலுமிச்சம் பழச்சாறுசேர்த்து கலந்துஇதனை வேக வைத்து எடுத்துள்ள டோக்லாவின் மீது ஊற்றிசிறிது தேங்காய் மற்றும்கொத்தமல்லி தளைகள் சேர்த்து பரிமாறினால் சுவையான டோக்ளா தயார்


 

குறிப்புகள்:


ரவை சேர்க்காமலும் இதே முறையில் டோக்ளா தயாரிக்கலாம்


இது உடனடியாக டோக்ளா தயாரிக்கும் முறை ஆதலால்இதில் இனோபேக்கிங் சோடா சேர்த்து செய்துஇருக்கிறேன்


Eno சேர்ப்பதால்மஞ்சள் பொடி சிறிது அளவாக சேர்க்கவும்ஏனென்றால்மஞ்சளும் Eno - உம் சேர்ந்துடோக்ளாவின் நிறத்தினை சிகப்பாக மாற்றிவிடும்


மாவில் Eno / பேக்கிங் சோடா சேர்ப்பதற்கு முன்னர் மாவினை கட்டியில்லாமல் நன்றாக கலந்து கொள்ளவும்இதனை சேர்ப்பதால்மாவு நன்றாக பொங்கி டோக்ளா மிகவும் மிருதுவாக வரும்


இதனை காலை உணவாகவோ / மாலை சிற்றுண்டியாகவோ சாப்பிடலாம்


இதனோடு green சட்னி சேர்த்து சுவைக்கலாம்


இன்ஸ்டன்ட் டோக்ளாவை சூடாக பரிமாறினால் சுவையாக / மிருதுவாக இருக்கும்.


Monday, December 21, 2020

மாங்காய் தொக்கு : (raw Mango thokku / mango pickle)



மாங்காய் தொக்கு :


தேவையான பொருள்கள்:


மாங்காய் : 2

மிளகாய் பொடி : 2- 3 தேக்கரண்டி 

மஞ்சள் பொடி : 1/4 தேக்கரண்டி 

வெந்தயம் : 1/4 தேக்கரண்டி 

பெருங்காயம் : 1/4 தேக்கரண்டி 

பொடித்த வெல்லம் : 1/2 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)

உப்பு : தேவையான அளவு 

நல்லெண்ணெய் : 4 மேஜைக்கரண்டி 

கடுகு : 1 தேக்கரண்டி 


செய்முறை:


முதலில் வெந்தயத்தை ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்துசிறிது ஆறிய பின்னர் அதனை பொடித்துஎடுத்து வைத்துக் கொள்ளவும்.


மாங்காய்களை தோல் நீக்கிய பின்னர்,அதனை துருவி எடுத்துக்கொள்ளவும்

(கேரட் துருவியை வைத்தோவெஜிடபிள் ஸ்லைசர் / கட்டர் வைத்தோ துருவிக்கொள்ளவும்)


ஒரு அடி கனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் பெருங்காயம் தாளித்த பின்னர்துருவியமங்கை சேர்த்து ஒரு 2 - 3 நிமிடங்கள் வரை வதக்கவும்


மாங்காய் சிறிது வதங்கிய பின்னர்அதனோடு மிளகாய் பொடிமஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்றாககலந்து வதக்கி கொள்ளவும்.


தேவைப்பட்டால்சிறிது நல்லெணெய் ஊற்றி ஒரு 4 நிமிடங்கள் வரை வதக்கிக் கொள்ளவும்


இறுதியாக பொடித்த வெந்தயத்தை சேர்த்து பின்னர் பொடித்த வெல்லம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கினால்எண்ணெய் பிரிந்து தொக்கும் திரண்டு வரும் பதத்தில் அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான மாங்காய்தொக்கு தயார்.


குறிப்புகள் :


வெந்தயத்தை வறுத்து பொடித்து சேர்ப்பதற்கு பதிலாகவெந்தயத்தை கடுகு தாளிக்கும் பொழுது அப்படியேசேர்த்தும் தொக்கு தயாரிக்கலாம்.


தொக்கு செய்வதற்கு கொஞ்சம் புளிப்பு அதிகமாக இருக்கும் மாங்காய்களை பார்த்து தேர்வு செய்தால்மிகவும்சுவையாக இருக்கும்உதாரணமாககிளிமூக்கு மாங்காய் உபயோகிக்கலாம்


எங்கள் வீட்டில் நல்லெணெய் தான் ஊற்றி தொக்கு செய்வோம்.மேலும் இந்தளவு எண்ணெய்யும் கட்டாயம்சேர்க்க வேண்டும்


தொக்கு செய்யும் பொழுது மிதமான தீயில் மட்டுமே வைத்து பொறுமையாக மாங்காயை வதக்கிக் கொள்ளவும்


தொக்கினுடைய மேற்பகுதியில் எப்பொழுதும் எண்ணெய் நிற்குமாறு பார்த்துக்கொள்ளவும்ஓரிரு நாளுக்கு ஒருமுறை தொக்கை நன்றாக ஒரு ஈரப்பத்தமில்லாத கரண்டியினால் கிளறி விட்டுக்கொள்ளவும்இவ்வாறுசெய்வதால்தொக்கின் மேற்பகுதியில் வரும் பூஞ்சைகளை (fungus ) தவிர்க்கலாம்


அதேபோன்றுதொக்கு நன்றாக ஆறிய பின்னர்ஒரு நல்ல சுத்தமான ஈரமில்லாத காற்றுப்புகாத முடிந்தவரைகண்ணாடிப் பாத்திரத்தில் ஸ்டோர் செய்துஅதே போல் ஈரமில்லாத கரண்டியும் உபயோகித்து கொள்ளவும்


இவ்வாறு செய்து பின்னர் இதனை குளிர்பதனப்பெட்டியிலும் வைத்தால்  - 2 மாதங்கள் வரைபயன்படுத்தலாம்