Thursday, December 23, 2021

பனீர் சாண்ட்விட்ச் (Paneer Sandwich)

 பனீர் சாண்ட்விட்ச் : 



தேவையான பொருள்கள் : 


துருவிய பனீர் : 1 கப் 

நறுக்கிய குடை மிளகாய் : 2 மேஜைக்கரண்டி 

பொடியாக அறிந்த கொத்தமல்லித்தழைகள் : 1 மேஜைக்கரண்டி  

மிளகாய்த்தூள் : ¼ தேக்கரண்டி 

சீரகத்தூள் : ¼ தேக்கரண்டி 

உப்பு : ¼ தேக்கரண்டி 

பிரட் : 4 துண்டுகள் 

தக்காளி சாஸ் : 2 மேஜைக்கரண்டி 

வெண்ணெய் : 2 தேக்கரண்டி 


செய்முறை : 


ஒரு மிக்ஸிங் பௌலில்துருவிய பனீர்கொத்தமல்லித்தழைகள்உப்புமிளகாய்த்தூள்சீரகத்தூள்குடைமிளகாய் மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.


பிரட் துண்டுகளின் மேலே சிறிது வெண்ணெய் தடவிபனீர் கலவையை வைத்து அதன் மேலே மற்றொருவெண்ணெய் தடவிய பிரட் துண்டு வைத்து மூடிஒரு பிரட் டோஸ்ட்டரிலோ அல்லது தவாவிலோ வைத்துடோஸ்ட் செய்து எடுத்தால் சுவையான பனீர் சாண்ட்விட்ச் தயார்


குறிப்புகள் : 


இதில் பனீருடன் துருவிய கேரட் , வேக வைத்த கார்ன் போன்ற விருப்பமான எந்த காய்கறிகளையும் சேர்த்துஇதே முறையில் சாண்ட்விட்ச் தயாரிக்கலாம்.


மிளகாய்த்தூளிற்கு பதிலாக மிளகுத்தூள் சேர்த்தும் இதே சாண்ட்விட்ச் தயாரிக்கலாம்.


தக்காளி சாசிற்கு பதிலாக தயிர் சேர்த்தும் செய்யலாம்.


இந்த மசாலா கலவைக்குப் பதிலாக இத்தாலியன் சீசனிங்ஸ் போன்ற விருப்பமான எந்த மசாலாகலைவையையும் சேர்த்து இந்த சாண்ட்விட்ச் செய்யலாம்.

கூட்டாஞ்சோறு (Koottanchoru)

கூட்டாஞ்சோறு 



தேவையான பொருள்கள் : 


அரிசி : 1 கப் 

துவரம் பருப்பு : 1/2 கப் 

புளி  :  சிறிய எலுமிச்சம் பழம் அளவு

மஞ்சள் பொடி :  1/2 தேக்கரண்டி 

பெருங்காயம் : 1 தேக்கரண்டி 

தண்ணீர் : தேவையான அளவு 

உப்பு : தேவையான அளவு 


அரைப்பதற்கு :

துருவிய தேங்காய் : கால் கப் 

காய்ந்த மிளகாய் : 8 - 10

சின்ன வெங்காயம் : 12

பூண்டு : 8

சீரகம் : 1 தேக்கரண்டி 


நறுக்கிய காய்கறிகள் : 


உருளைக்கிழங்கு : 1 (பெரியது)

கேரட் : 2 

பீன்ஸ் : 10 

அவரைக்காய் :  10

வாழைக்காய் : 1 

மாங்காய் : 1

கத்திரிக்காய் : 3

முருங்கைக்காய் : 1 

முருங்கை இலைகள் :  ஒரு கைப்பிடி 


தாளிப்பதற்கு : 

நல்லெண்ணெய் : 2 மேஜைக்கரண்டி 

கடுகு : 1 தேக்கரண்டி 

உளுத்தம்பருப்பு : 1 தேக்கரண்டி 

வெங்காய வடகம் : 2-3

கருவேப்பிலை : 10


செய்முறை : 


அரிசி மற்றும் பருப்பைக் களைந்து ஒரு அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும் 


அனைத்து காய்கறிகளையும் சற்று பெரிய நீளத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் 


புளியைக் கரைத்து புளி கரைசலை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும் 


ஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாயோடு தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும் 


பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய்சின்ன வெங்காயம் , பூண்டு மற்றும் சீரகம் சேர்த்து அரைத்து தனியாகஎடுத்து வைத்துக் கொள்ளவும் 


பின்னர்குக்கரில் ஊற வைத்த அரிசிபருப்புநறுக்கிய காய்கறிகள் தேவையான தண்ணீர் சேர்த்துசிறிதுகொதிக்க விட வேண்டும் 


காய்கறிகள் மற்றும் அரிசி பாதி வெந்தவுடன் அதனுடன் புளிக்கரைசல்அரைத்து வைத்துள்ள விழுதுகள்மமஞ்சள் பொடிபெருங்காயம் மற்றும் தேவையான உப்பு சேர்த்து குக்கரை மூடி விசில் வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும் 


ஒரு வாணலியில்சிறிது எண்ணெய் சேர்த்து வெங்காய வடகங்களை பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்


மற்றொரு வாணலியில்சிறிது எண்ணெய் சேர்த்து தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களை சேர்த்துதாளித்துக் கொள்ளவும் 


தாளித்த பொருள்களை சாதத்தில் சேர்த்து கலந்தால் சுவையான கூட்டாஞ்சோறு தயார் 


 குறிப்புகள் : 


மாங்காய் சேர்க்கவில்லையென்றால் , புளியின் அளவை அதிகரித்து கொள்ளவும்


இதனோடு கூழ்வத்தல்/வடகம் , அப்பளம் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும் 


இது குளிர் சாதனப்பெட்டியில் வைக்காமலேயே ஒரு நாள் முழுவதும் கெடாமல் இருக்குமாகையால்இதனைசுற்றுலா செல்லும் போது செய்து எடுத்து செல்லலாம் 


எனக்கு முருங்கையிலை கிடைக்காததால் நான் அதை சேர்க்கவில்லை

ஆனால்கண்டிப்பாக முருங்கையிலை சேர்த்து செய்து ருசியுங்கள் 

Monday, November 8, 2021

பால் பாயசம்(Paal payasam)

 பால் பாயசம் :



தேவையான பொருள்கள் : 


பச்சரிசி : 1/4 கப்

சர்க்கரை : 1/4 கப்

பால் : 5-6 கப் 

நெய் : 1 மேஜைக்கரண்டி 

முந்திரிப் பருப்புகள் : 10

கிஸ்மிஸ் : 2 தேக்கரண்டி 

ஏலக்காய்பொடி : 1/8 தேக்கரண்டி 

குங்குமப்பூ : சிறிதளவு ( விருப்பப்பட்டால் ) 



செய்முறை :


அரிசியை சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ளவும் 

ஒரு அடி கனமான பெரிய வாணலியில்கப் பால் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்துக்கொள்ளவும் 

பின்னர் இதனுடன் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் 

மிதமான தீயில் வைத்துஒரு நிமிடங்கள் முதல் நிமிடங்கள் வரை (அரிசி நன்றாக வேகும் வரை ) வேகாவைத்துக் கொள்ளவும் 

பாலோடு கலந்து வெந்த அரிசியை சிறிது மசித்துக் கொள்ளவும் 

பின்னர் இதனுடன் சர்க்கரை சேர்த்து ஒரு நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான பால்பாயசம் தயார் 

மற்றொரு கடாயில்நெய் சேர்த்து முந்திரி மற்றும் கிஸ்மிஸ் சேர்த்து பொன்னிறமாக வறுத்துஏலக்காய் தூள்சேர்த்துபால் பாயசத்தில் கலந்து கொள்ளவும் 


குறிப்புகள் : 


பாலிலேயே அரிசி வேகுவதால் , இந்த பாயசம் கொஞ்சம் கிரீமியாக இருக்கும்

விருப்பப்பட்டால் சிறிது குங்குமப்பூ சேர்த்து இறக்கலாம் 

இந்த பாயசத்தை சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பரிமாறலாம்